புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி, டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்குடன் இன்று தொலைபேசியில் உரையாடினார். தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்கத் துறைகளில் இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் உள்ள ஆர்வத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
இந்திய மின்சார வாகனச் சந்தையில் நுழைவதற்கான வாய்ப்புகளை டெஸ்லா நிறுவனம் ஆராய்ந்து வரும் இந்த நேரத்தில் இந்த உரையாடல் நடந்துள்ளது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் வாஷிங்டனில் இருவருக்கும் இடையில் நடந்த முந்தைய பேச்சுவார்த்தையின் அடிப்படையில், பல்வேறு தலைப்புகளின் கீழ் இருவரும் உரையாடியுள்ளனர்.