புதுடெல்லி: மத்திய பட்ஜெட் 2025-ல் அறிவிக்கப்பட்டுள்ள வரிச் சலுகைகள் காரணமாக சில பொருள்களின் விலை குறைகின்றன. அதேபோல் வரி விலக்கு ரத்து மற்றும் புதிய வரி விதிப்புகள் காரணமாக சில பொருள்களின் விலை அதிகரிக்கவுள்ளன.
2025-26 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (சனிக்கிழமை) தாக்கல் செய்தார். அதில் மாதாந்திர ஊதியதாரர்களுக்கு மிகப் பெரிய சலுகை அறிவித்துள்ளார். ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் பெறுபவர்களுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டும் இல்லாமல், மொபைல் போன்கள், சார்ஜர்கள், மற்றும் சில புற்றுநோய் மருந்துகள் உள்ளிட்ட பொருள்களுக்கும் வரி சலுகையை அறிவித்துள்ளார். அதேபோல், தங்கம் மற்றும் வெள்ளிக்கான சுங்க வரி 6 சதவீதமும், பிளாட்டினம் மீதான வரி 6.4 சதவீதமும் குறைக்கப்பட்டுள்ளது. ஃபெர்ரோனிகெல் மற்றும் பிலிஸ்டர் காப்பருக்கான அடிப்படை சுங்க வரியை (basic customs duty) நீக்குவதற்கும் நிதியமைச்சர் முன்மொழிந்துள்ளார்.