ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு பாதுகாப்பானது என்று இந்து தமிழ் திசை நாளிதழ் மற்றும் பிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் இணைந்து சென்னையில் நேற்று நடத்திய நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் பா.பத்மநாபன் தெரிவித்துள்ளார்.
'இந்து தமிழ் திசை' நாளிதழ் மற்றும் 'மிரே அசட் மியூச்சுவல் ஃபண்ட்' நிறுவனம் இணைந்து முதலீடும் முன்னேற்றமும்' என்ற கருப்பொருளுடன் மியூச்சுவல் ஃபண்ட் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சென்னையில் நேற்று நடத்தியது. இதில் பொருளாதார நிபுணர் பா.பத்மநாபன் பங்கேற்று, 'மியூச்சுவல் ஃபண்ட் குறிக்கோ ளுடன் கூடிய முதலீடு' என்ற தலைப்பில் பேசியதாவது: