சென்னை: இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக நடப்பு ஐபிஎல் சீசன் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. நாளை (மே 17) முதல் எஞ்சியுள்ள ஆட்டங்கள் மீண்டும் தொடங்க உள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் அட்டவணையில் ஏற்பட்டுள்ள மாற்றம் பல்வேறு அணிகளில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. போர் பதற்றம் காரணமாக தாயகம் திரும்பிய வெளிநாட்டு வீரர்கள் மீண்டும் இந்தியா திரும்புவதில் நிலவும் சிக்கல், தேசிய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ள வீரர்கள், காயத்தால் விலகிய வீரர்கள் விட்டுச்சென்ற வெற்றிடங்களை அணிகள் நிரப்ப வேண்டி உள்ளது.