இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தொடர்பாக சி.எஸ்.அமுதன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமீபத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ரூ.5 கோடி நஷ்ட ஈடு கேட்டு வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார் இளையராஜா. இந்த விவகாரம் இணையத்தில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது. தணிக்கை சான்றிதழில் இசையுரிமை நிறுவனத்திடம் இருந்து அனுமதி வாங்கியதை வைத்து பலரும் கருத்து தெரிவிக்கத் தொடங்கினார்கள்.