கோவை: கோவையில் தங்கி ஒரு வார காலம் ஆயுர்வேத சிகிச்சை பெற்ற தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்.18) மதியம் வீடு திரும்பினார்.
தமிழக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதி பகுதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு அடிக்கடி வந்து சிகிச்சை பெற்று செல்கிறார். இந்த மையத்தில் நீராவி குளியல், யோகா,நேச்சுரோபதி, அக்குபஞ்சர், பிசியோதெரபி, சிறப்பு தெரபி சிகிச்சைகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 11-ம் தேதி இரவு கோவை வந்த ஓ.பன்னீர்செல்வம், கோவை கணபதியில் உள்ள ஆயுர்வேத சிகிச்சை மையத்துக்கு சென்று தங்கி சிகிச்சை பெற்று வந்தார்.