கோவை: கோவையில் ஒற்றை காட்டு யானையை விரட்ட வந்த இரு கும்கி யானைகளுக்கு மதம் பிடித்தததால் ஆனைமலை முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் சின்னத்தம்பி என்ற கும்கி யானை அழைத்து வரப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்தில் தடாகம், பன்னிமடை, சோமையனூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன. இதில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளில் உலா வந்த ஒற்றை யானை தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர்.