சென்னை: ஓய்வூதியர்களின் உயர்த்தப்பட்ட அகவிலைப்படிக்காக மாதந்தோறும் ரூ.15 கோடி கடன் வழங்க வேண்டும் என போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனத்திடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்துக் கழகங்களைப் பொறுத்தவரை குடும்ப ஓய்வூதியம் பெறும் 20 ஆயிரம் பேர் உள்பட சுமார் 90 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் உள்ளனர். இவர்களுக்கு கடந்த 2015-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இறுதியாக அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒவ்வொரு முறை அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தி அளிக்கும்போதும், ஓய்வூதியர்களுக்கு அந்த பலன் கிடைப்பதில்லை.