லண்டன்: இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மழையால் பாதிக்கப்பட்டது.
லண்டன் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஆலி போப் பீல்டிங்கை தேர்வு செய்தார். இரு அணியிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. இந்திய அணியில் ரிஷப் பந்த், ஷர்துல் தாக்குர், ஜஸ்பிரீத் பும்ரா, அன்ஷுல் கம்போஜ் ஆகியோர் நீக்கப்பட்டு துருவ் ஜூரெல், கருண் நாயர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப் ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.