துபாய்: சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு எதிரான லீக் ஆட்டத்தில் இந்திய அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வருண் சக்கவர்த்தி அபாரமாக பந்துவீசி 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதையடுத்து முதல் அரை இறுதியில் ஆஸ்திரேலிய அணியை, இந்தியா எதிர்த்து விளையாடும்.
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதிய கடைசி லீக் ஆட்டம் துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது.