பெங்களூரு: மைசூரு நகர வளர்ச்சி ஆணையத்தின் (முடா) நிலம் ஒதுக்கப்பட்டது தொடர்பான ஊழல் வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்ற ஆர்டிஐ ஆர்வலர் ஸ்நேகமாயி கிருஷ்ணா என்பவர் தாக்கல் செய்த ரிட் மனுவினை கர்நாடகா உயர் நீதிமன்றம் இன்று (வெள்ளிக்கிழமை) தள்ளுபடி செய்தது.
அனைத்து தரப்பினரின் வாதங்களையும் கேட்ட பின்பு உயர் நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பினை ஒத்திவைத்திருந்தது. இந்த வழக்கினை தற்போது லோக் ஆயுக்தா விசாரித்து வருகிறது. இந்த நிலையில் உயர் நீதிமன்றம் இவ்வாறு தீர்ப்பினை வழங்கியுள்ளது.