அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்த பள்ளிக் கல்வித்துறை பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. அதில் ஒன்று ‘LEVEL UP’ எனப்படும் ஆங்கில அறிவை அதிகரிக்கும் திட்டமாகும்.
ஆறு முதல் 9-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஆங்கில மொழியில் வாசித்தல், பேசுதல் மற்றும் எழுதுதல் ஆகிய திறன்களை அதிகரிக்கச் செய்வதே இத்திட்டத்தின் நோக்கம். இதன்மூலம் மாணவர்கள் பள்ளிக் கல்வி மற்றும் உயர்கல்வி முடித்து வேலைவாய்ப்பு தேடிச் செல்லும்போது எளிதில் வேலைவாய்ப்புகளைப் பெற ஆங்கில அறிவு உதவும் என்ற நல்ல நோக்கத்தில் இத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.