மதுரை: “தமிழகத்தில் வக்பு திருத்த சட்டத்தை வைத்து இந்துக்கள் – இஸ்லாமியர்கள் இடையே கலவரத்தை தூண்டி 2026 தேர்தலில் வெற்றி பெற திமுக கூட்டணி சதி செய்து வருகிறது” என்று பாஜக சிறுபான்மை பிரிவு தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் குற்றம்சாட்டியுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் பாஜக சார்பில் வக்பு திருத்த சட்ட ஆதரவு பொதுக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பாஜக சிறுபான்மையினர் பிரிவின் தேசிய தலைவர் வேலூர் இப்ராகிம் பங்கேற்பதாக இருந்தது. இதற்காக வேலூர் இப்ராகிம் இன்று மதுரை வந்திருந்தார். மதுரையிலிருந்து நத்தம் புறப்பட்ட இப்ராகிமை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.