மதுரை: கல்லூரி படிக்க, வேலை கிடைக்க உதவியைத் தொடர்ந்து திருமணத்துக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்பிய தமிழக முதல்வருக்கு மதுரையைச் சேர்ந்த பெண் நன்றியை தெரிவித்து நெகிழ்ந்தார்.
மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகிலுள்ள திருவேடகத்தைச் சேர்ந்த மனோகரன். இவரது மனைவி முருகேஸ்வரி. இவர்களுக்கு 2 மகள்கள். மூத்த மகள் சோபனா கல்லூரி படிக்கவிருந்தபோது, ஓட்டுநரான தந்தை மனோகரனுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. தனது கல்லூரிக் கல்வி கானல் நீர் ஆகிவிடுமோ என, நினைத்து கல்லூரி படிக்க உதவிடுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் ஒன்றை சோபனா எழுதினார்.