கழிவுநீர் ஓடையாக உருமாறி வரும் புழல் ஏரி உபரி நீர் கால்வாயால், புழல் ஊராட்சி ஒன்றிய பகுதிகள், பெருநகர சென்னை மாநகராட்சி பகுதிகளில் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்று, புழல் ஏரி. திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி வட்டத்தில் உள்ள இந்த ஏரி 18 சதுர கி.மீ. பரப்பளவில் செங்குன்றம். புழல், பம்மதுகுளம், சென்னை-அம்பத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் பரந்து விரிந்துள்ளது.