கெய்ரோ: காசா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த போர் நிறுத்தப்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தப்படி ஹமாஸ் பிடியிலுள்ள இஸ்ரேல் பணய கைதிகளும், அதற்கு ஈடாக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களும் விடுவிக்கப்பட்டு வந்தனர். முதற்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் மார்ச் 1ம் தேதி முடிவுற்ற நிலையில் இரண்டாம்கட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் இன்னும் இறுதி செய்யப்படவில்லை.
போர் ஒப்பந்தத்தையும் மீறி தெற்கு மற்றும் மத்திய காசா பகுதியில் உள்ள மவாரி, கான் யூனிஸ், அல் தராஜ், ராஃபா உள்ளிட்ட பகுதிகளில் இஸ்ரேல் படையினர் வான்வழித் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் குழந்தைகள், பெண்கள் என 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோன்று சிரியா, லெபனானின் பல்வேறு பகுதிகளிலும் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலை நடத்தியுள்ளது. இதன்மூலம் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீண்டும் போரைத் தொடங்கியுள்ளதாக ஆங்கில ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
பிணைக் கைதிகளை விடுவிக்க மறுப்பது மற்றும் அனைத்து போர்நிறுத்த திட்டங்களையும் நிராகரிப்பது போன்ற நடவடிக்கைகளில் ஹமாஸ் படையினர் ஈடுபபிணைக் கைதிகள் விடுவிப்பில் ஹமாஸ் அமைப்பு விதிகளை கடைபிடிக்கவில்லை என்றும், இதனால், கூடுதல் ராணுவப் படைகளுடன் ஹமாஸுக்கு எதிராக இஸ்ரேல் போராடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதல்: குழந்தைகள், பெண்கள் உள்பட 100க்கும் அதிகமானோர் உயிரிழந்ததாக தகவல் appeared first on Dinakaran.