
ஜெருசலேம்: காசாவில் நீண்ட நாட்களாக பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்தவர்கள் அண்மையில் விடுவிக்கப்பட்டனர். இதை தொடர்ந்து 738 நாட்களுக்குப் பிறகு இஸ்ரேல் தம்பதியினர் மீண்டும் ஒன்று சேர்ந்துள்ளனர்.
இஸ்ரேல் ராணுவம் – பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆட்சி செய்த ஹமாஸ் குழுவினர் இடையே கடந்த 2 ஆண்டுகளாக போர் நடைபெற்றது. அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முயற்சியால் இரு தரப்பினர் இடையே கடந்த 9-ம் தேதி அமைதி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து காசாவில் 10-ம் தேதி போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது.

