காசாவில் பசியில் கதறும் குழந்தைகள் மீது சர்வதேச ஊடகங்களின் கரிசனம் இருக்க, ஊடகப் பார்வையை மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகப் பார்வையையும் இஸ்ரேலின் பக்கம் திருப்பும் விதமாக, ஒரு வரலாற்று முடிவை நோக்கி முன்னேறி வருகிறார் அந்நாட்டுப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு.
இதுவரை போரில் தரைமட்டமாக்கியதெல்லாம் போதும், இனி முழுமையாக காசாவை கைப்பற்றிவிடலாம் என்பதை நோக்கி அவர் நகர்ந்து வருவதை உறுதிப்படுத்தும் விதமாகவே, இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தைக் கூட்டி இது தொடர்பாக அவர் விவாதிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த விவாதம் இந்திய நேரப்படி ஆக.8-ம் தேதி (இன்று) இரவு 8.30 மணிக்கு நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.