புதுடெல்லி: உத்தரப்பிரதேசம் மாநிலம் வாராணாசியில் காசி தமிழ் சங்கமம் 3.0 (கேடிஎஸ் 3.0) நடைபெறுகிறது. இதில் நேஷனல் புக் டிரஸ்ட் ஆப் இந்தியா (என்பிடி) நடத்திய மொழிபெயர்ப்புப் பட்டறையில் பாரதியாரின் கொள்ளுப்பேத்தி முனைவர்.ஜெயந்தி முரளி கலந்து கொண்டார்.
உபி.,யின் வாராணாசியில் பிப்ரவரி 15-ல் கேடிஎஸ் 3.0 துவங்கியது. இதன் துவக்க விழாவில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத், மத்தியக் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் மத்திய செய்தி ஒலிபரப்புத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டனர்.