வாரணாசி: காசி தமிழ்ச் சங்கமத்தின் மூன்றாவது ஆண்டு நிகழ்வில் பங்கேற்றுள்ள தமிழகத்தைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவினர் காசி ஹனுமன் படித்துறை பகுதியில் கங்கையில் புனித நீராடினர்.
பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே பாரதம், உன்னத பாரதம் என்ற தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக கல்வி அமைச்சகத்தால் காசி தமிழ்ச் சங்கமம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூன்றாம் ஆண்டு நிகழ்வில் பங்கேற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில் வல்லுநர்கள் மற்றும் தொழில்முனைவோர் குழுவினர் காசி ஹனுமன் படித்துறையில், கங்கையில் புனித நீராடி, பிரார்த்தனை செய்தனர். அங்கு இருந்த வேத விற்பன்னர்கள், பல்வேறு படித்துறைகளின் வரலாறு குறித்து விரிவாக எடுத்துரைத்தனர்.