காஞ்சிபுரம் மாவட்டம், பிள்ளைப்பாக்கம் மற்றும் திருவள்ளூர் மாவட்டம் மணலூர் ஆகிய இடங்களில் ரூ 1,112 கோடி செலவில், புதிய மின்னணு உற்பத்தி பேட்டைகளை மத்திய அரசு அமைக்க உள்ளது என்று, மத்திய ரயில்வே, தகவல் ஒலிபரப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், பண்ணூரில் தனியார் மின்னணு பொருட்கள் உற்பத்தி நிறுவனத்தின் அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில், மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் பங்கேற்று அடிக்கல் நாட்டினார்.