உலக சுற்றுச்சூழல் தினம் இன்று (ஜூன் 5) அனுசரிக்கப்படுவதை ஒட்டி, ‘சுற்றுப்புற சூழலில் அக்கறை கொள்வதில் இருந்து எது நம்மை தடுக்கிறது?’ என்ற தலைப்பில் குருதேவ் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் வெளியிட்ட செய்தி இது…
“அனைத்து வளர்ச்சியின் நோக்கமும் வாழ்வை ஆதரிக்கவும் தக்க வைத்துக் கொள்ளவுமாக தான் இருக்க வேண்டும். வளர்ச்சி என்பது கட்டாயம் தான், ஆனால் ஒரு குறுகிய கண்ணோட்டத்தோடு அதை அணுகும்போது அது பேரழிவு ஆகிறது. உயிர்களை அதன் அனைத்து வடிவங்களிலும் மதிக்காத வளர்ச்சி வளர்ச்சியாகவே இருக்க முடியாது. வளர்ச்சிக்கான கண்ணோட்டத்தில் இயற்கையை பற்றிய அக்கறையும் கருணையும் இருந்தால் மட்டுமே அது அனைத்தையும் உள்ளடக்கிய முழு வடிவமாகத் திகழும்.