சென்னை: காமராஜரின் 123-வது பிறந்தநாளையொட்டி தமிழக ஆளுநர், முதல்வர் மற்றும் அரசியல் தலைவர்கள் மரியாதை செலுத்தினர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் காமராஜரின் 123-வது பிறந்த தினம் நேற்று தமிழக அரசின் சார்பிலும், அரசியல் கட்சிகள் சார்பிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
சென்னை கிண்டி காந்தி மண்டப வளாகத்தில் உள்ள காமராஜர் நினைவு இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்ட காமராஜரின் படத்துக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மலர்தூவி மரியாதை செலுத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜரின் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.