பெய்ஜிங்: சீனாவின் தியான்ஜின் நகரில் அண்மையில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) உச்சி மாநாடு நடைபெற்றது.
இதில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இந்திய பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றனர். கடந்த 1-ம் தேதி எஸ்சிஓ உச்சி மாநாடு நிறைவடைந்த பிறகு அதிபர் புதின் தனது சிறப்பு காரில் ஹோட்டலுக்கு புறப்பட்டார். அப்போது பிரதமர் நரேந்திர மோடியையும் அவர் தனது காரில் அழைத்துச் சென்றார். இரு தலைவர்களும் ஹோட்டலுக்கு சென்ற பிறகும் காரில் இருந்து இறங்கவில்லை. சுமார் ஒரு மணி நேரம் அதிபர் புதினும் பிரதமர் மோடியும் காரில் ரகசிய ஆலோசனை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்து உள்ளன.