கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்றம் உத்தரவு..!!
சென்னை: கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து ஐகோர்ட் வகுத்துள்ள விதிமுறையில்,
*லாரிகளில் கால்நடைகள் நிற்க போதுமான இடவசதியுடன் கொண்டு செல்ல வேண்டும்.
*முறையான காற்று வசதியுடன், உணவு, குடிநீர் வழங்க வேண்டும்.
*முறையான ஆவணங்களுடன் மட்டுமே கால்நடைகளை கொண்டு செல்ல வேண்டும்.
*கால்நடைகள் உடல்நிலை ஆரோக்கியமாக இருக்கிறதா என பரிசோதனை நடத்திய பிறகே அவற்றை கொண்டு செல்ல வேண்டும். ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
*கேரளாவுக்கு கடத்தப்பட்டதாக பறிமுதல் செய்யப்பட்ட 117 கால்நடைகளை ஒப்படைக்க கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
The post கால்நடைகளை வாகனங்களில் கொண்டு செல்லும் போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகளை வகுத்து உயர் நீதிமன்றம் உத்தரவு..!! appeared first on Dinakaran.