சென்னையை அடுத்த கும்மிடிப்பூண்டி அருகே பள்ளிக்குச் சென்றுவிட்டு வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்த ஏதுமறியா 10 வயது சிறுமியை அடையாளம் தெரியாத நபர் வாயை மூடி அருகிலுள்ள தோப்பிற்குள் தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் மிகவும் கொடூரமானது.
ரயில் பாதையை ஒட்டியுள்ள சாலையில் நடந்து சென்ற சிறுமி பட்டப் பகலில் இதுபோன்ற வன்முறையை சந்தித்திருப்பது பெண் குழந்தைகளுக்கு தமிழகத்தில் பாதுகாப்பில்லாத சூழல் இருப்பதையே சுட்டிக் காட்டுகிறது. அந்தச் சிறுமி பள்ளியில் இருந்து தனது பாட்டி வீட்டிற்கு நடந்து செல்லும் வழியில் இச்சம்பவம் நடந்துள்ளது.