கோவை: “காவல் துறையை கண்டித்தும், அபிராமி அம்மன் சிலையை பிரதிஷ்டை செய்ய வலியுறுத்தியும் வரும் 25-ம் தேதி, திண்டுக்கல்லில் இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட உள்ளது,” என்று அந்த அமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கூறியுள்ளார்.
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் கோவையில் இன்று (மார்ச் 11) செய்தியாளர்களிடம் கூறியது: “திருப்பரங்குன்றம் மலை விவகாரம் தொடர்பாக இந்து முன்னணி சார்பில், பக்தர்களை திரட்டி அறப்போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து காவல் துறையினர், அங்கு 144 தடையுத்தரவு பிறப்பித்தனர். பின்னர், ஜனநாயக முறையின் படி, நீதிமன்றம் சென்று நீதிமன்ற உத்தரவு பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.