புதுடெல்லி: காஷ்மீர் உடனான பாகிஸ்தானின் உறவு என்பது, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை விட்டுக் கொடுப்பது மட்டுமே என்று இந்தியா தெரிவித்துள்ளது.
வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ரந்திர் ஜெய்ஸ்வால் இன்று புதுடெல்லியில் வாராந்திர செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். அப்போது, செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம்: காஷ்மீர் பாகிஸ்தானின் "கழுத்து நரம்பு" என்று அந்நட்டு ராணுவத் தளபதி ஜெனரல் அசிம் முனிர் கூறி இருக்கிறார். ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒரு யூனியன் பிரதேசம். பாகிஸ்தானுடனான அதன் ஒரே உறவு, அந்த நாடு சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள பிரதேசத்தை விட்டுக்கொடுத்தல் மட்டுமே.