சென்னை: கிராமக் கோயில் பூசாரிகள், ஆதிதிராவிடர் கோயில் அர்ச்சகர்கள் 10 ஆயிரம் பேருக்கு இருசக்கர வாகனம் வாங்க தலா ரூ.12,000 மானியம் வழங்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவித்தார்.
தமிழக சட்டப்பேரவையில் அறநிலையத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சேகர்பாபு, 210 அறிவிப்புகளை வெளியிட்டார். அதில் அவர் கூறியதாவது: ஆயிரம் இணையர்களுக்கு கோயில்கள் சார்பில் 4 கிராம் தங்கத் தாலி உட்பட ரூ.70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்படும்.