சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓய்வு பெற்று சுமார் 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில் கிரிக்கெட்டை அனுபவித்து, ரசித்து விளையாட விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஐபிஎல் 2025-ம் ஆண்டுக்கான சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக மீண்டும் அவர் களமாட உள்ளார். இந்நிலையில், புதன்கிழமை நடைபெற்ற மொபைல் செயலி அறிமுக நிகழ்வில் தோனி கலந்து கொண்டார்.