கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அறையில் உள்ள சுவர் கடிகாரத்தில் ரகசிய கேமரா பொருத்தியிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பான புகாரின் பேரில் போலீஸார் விசாரித்து வருகின்றனர். இதனிடையே, நகராட்சி ஆணையர் அறையில் ஜன.25-ம் தேதி நடந்த வாக்குவாத வீடியோ பதிவு சமூக வலைதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் ஆணையராக கிருஷ்ணமூர்த்தி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், இவர் நகரக் காவல் நிலையத்தில் நேற்று முன்தினம் புகார் அளித்தார். அந்த புகாரில், ‘கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் உள்ள எனது அறையில் தமிழ் எண்ணுருக்களுடன் கூடிய சுவர் கடிகாரம் (டிஜிட்டல்) உள்ளது. இந்த கடிகாரத்தில் சிறிய அளவிலான ரகசிய கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராவை பொருத்தியது யார் என்பதைக் கண்டறிந்து, பொருத்தியவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.