புதுடெல்லி: டெல்லியில் பாஜக ஆட்சிக்கு வந்தால் இங்குள்ள குடிசை பகுதிகள் இடிக்கப்படாது, எந்த நலத்திட்ட உதவிகளும் நிறுத்தப்படாது என்று பிரதமர் மோடி உறுதியளித்துள்ளார். டெல்லியில் உள்ள குடிசைப்பகுதிகளை பாஜக குறிவைத்துள்ளது, அக்கட்சி ஆட்சிக்கு வந்தால் குடிசைகள் அழிக்கப்படும், நலத்திட்ட உதவிகள் நிறுத்தப்படும் என்ற ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டுக்கு பிரதமர் இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளார்.
டெல்லியின் ஆர்.கே.புரத்தில் நடந்த பிரச்சார பேரணி பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி," பாஜக ஆட்சிக்கு வந்தால் தேசியத் தலைநகரில் உள்ள குடிசைவாசிகளுக்கு ரூ.5-க்கு சத்தான உணவு வழங்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். அதேபோல் ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும் அவர்களுக்கு ரூ.10 லட்சத்துக்கு காப்பீடு திட்டம் வழங்கப்படும். அவர்களுடைய குழந்தைகளின் பள்ளி கல்வி கட்டணத்துக்கும் பாஜக அரசு உதவிகள் செய்திடும்.