சென்னை: ‘மூக்குத்தி அம்மன் 2’ படத்தில் நடிப்பதற்காக நடிகை நயன்தாரா ஒரு மாதமாக குடும்பத்துடன் விரதம் இருக்கிறார் என தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி இயக்கத்தில், நயன்தாரா நடிப்பில் 'மூக்குத்தி அம்மன் 2' திரைப்படம் உருவாகவுள்ளது. இதற்கான பூஜை இன்று (மார்ச் 06) நடைபெற்றது. இதற்காக 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப் பிரபலங்கள் கலந்து கொண்டனர்.