சென்னை: குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் அறிவித்துள்ளார். அடுத்த 3 மாதங்களில் குரூப் 1, 1ஏ முதன்மை தேர்வுகள் நடைபெறும். குரூப் 1, 1ஏ முதல்நிலைத் தேர்வுக்காக எளிமைப்படுத்தப்பட்ட ஓ.எம்.ஆர். தாளை அறிமுகப்படுத்தி உள்ளோம். நடப்பாண்டில் இதுவரை 10,227 வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டில் இன்னும் 12,000 வேலைவாய்ப்பு வழங்கப்படவுள்ளது.
The post குரூப் 1, 1ஏ முதல்நிலை தேர்வு முடிவு 2 மாதத்தில் வெளியிடப்படும்: டி.என்.பி.எஸ்.சி. தலைவர் பிரபாகர் அறிவிப்பு appeared first on Dinakaran.