இந்திய பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பாக குறு, சிறு தொழில் துறை செயல்படுகிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பட்ஜெட்டுக்கு பிந்தைய கருத்தரங்கில் காணொலி மூலம் அவர் நேற்று பேசியதாவது: இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கடந்த 10 ஆண்டுகளில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டு உள்ளன. இதன்மூலம் தொழில்துறையில் புதிய நம்பிக்கை பிறந்திருக்கிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மத்தியில் 3-வது முறையாக பதவியேற்று உள்ளது. கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட், மக்கள் மற்றும் தொழில் துறையினரின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் வகையில் அமைந்துள்ளது. அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு இருக்கிறது.