புதுடெல்லி: சீக்கியர்கள் மீதான தாக்குதல் வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என அறிவிக்கப்பட்டதால், அவரது ஜாமீனுக்கு எதிரான மனு பயனற்றது என கூறி டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
டெல்லி சரஸ்வதி விகார் பகுதியில் கடந்த 1984-ம் ஆண்டு சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையில் 2 பேர் கொல்லப்பட்ட வழக்கில், காங்கிரஸ் மூத்த தலைவர் சஜன் குமார் குற்றவாளி என விசாரணை நீதிமன்றம் கடந்த 12-ம் தேதி தீர்ப்பளித்தது. அவருக்கான தண்டனை இன்னும் அறிவிக்கப்படவில்லை. சீக்கியர்கள் மீதான மற்றொரு தாக்குதல் வழக்கில் சஜன் குமாருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.