சென்னை: “அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது. எனவே, கட்சியின் நிலைப்பாடுகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து கட்சித் தலைமையின் அனுமதி பெறாமல், தலைமைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்ட நிர்வாகிகள் எவ்வித கருத்துகளையும் பத்திரிக்கை மற்றும் ஊடகங்களுக்கு கொடுக்க வேண்டாம்,” என்று அக்கட்சியின் தலைமைக் கழகம் கேட்டுக் கொண்டுள்ளது. கூட்டணி ஆட்சி விவகாரம் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இந்தக் கட்டுப்பாடு கவனம் ஈர்த்துள்ளது.
இது தொடர்பாக அதிமுக தலைமைக் கழகம் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோர் காலந்தொட்டு, அவர்களது நல்லாசியோடு அதிமுக ஒரு கட்டுக்கோப்பான இயக்கமாக செயல்பட்டு வருகிறது என்பதை அனைவரும் நன்கு அறிவார்கள். கட்சியின் முக்கிய முடிவுகள் மற்றும் நிலைப்பாடுகள் குறித்தான தகவல்களை, கட்சித் தலைமை உரிய நேரத்தில், உரிய முறையில் அவ்வப்போது தெரிவிக்கும்.