நெல்லை: புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி நெல்லையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: கடந்த தேர்தலில் நாங்கள் அதிமுக கூட்டணியில் இருந்தோம். தற்போது அதிமுக பாஜவோடு கூட்டணி வைத்துள்ளது. தேர்தலுக்கு இன்னமும் 10 மாதங்கள் உள்ளது.
வரும் டிசம்பரில் நடக்கும் மாநில மாநாட்டிற்கு பிறகு கூட்டணி குறித்து முடிவெடுப்போம். அதிமுக கூட்டணியில் நான்கைந்து கட்சிகள் இருந்தன. கூட்டணி கட்சியினருடன் ஆலோசனை நடத்தாமல், அவர்கள் பாஜவோடு கூட்டணியில் இணைந்து விட்டனர். எங்கள் மாநாட்டில் கூட்டணி குறித்த நிலைப்பாட்டை தெளிவாக அறிவிப்போம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
The post ‘கூட்டணி கட்சிகளை ஆலோசிக்காமல் பாஜவுடன் அதிமுக கூட்டணி வைப்பதா?’ appeared first on Dinakaran.