திருவனந்தபுரம்: தேவாலய நில விவகாரத்தை எழுப்பிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, கேரள முதல்வர் பினராயி விஜயன் ஆகியோருக்கு கேரள பாஜக தலைவர் ராஜீவ் சந்திரசேகர் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கத்தோலிக்க தேவாலயங்கள், அரசு சாரா நிலங்களை அதிகளவில் வைத்துள்ளன என ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆர்கனைஸர் இதழில் வெளியான கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை சுட்டிக்காட்டி மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி எக்ஸ் தளத்தில் வெளியிட்ட செய்தியில், ‘‘ வக்பு சட்ட திருத்த மசோதா, தற்போது முஸ்லிம்களை குறிவைக்கிறது. ஆனால் எதிர்காலத்தில் இது மற்ற சிறுபான்மையினரை குறிவைக்க முன்மாதிரிய ஏற்படுத்தியுள்ளது என நான் கூறியிருந்தேன். ஆர்எஸ்எஸ் தனது கவனத்தை தேவாலயங்கள் மீது திருப்ப நீண்ட காலம் ஆகவில்லை’’ என தெரிவித்திருந்தார்.