திருவனந்தபுரம்: கேரள முன்னாள் முதல்வரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான வி.எஸ்.அச்சுதானந்தன் காலமானார். அவருக்கு வயது 101.
இந்தியாவின் மூத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான அச்சுதானந்தன் 2006 முதல் 2011 வரை கேரள முதல்வராக இருந்தவர். 2019-ஆம் ஆண்டு லேசான பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட பிறகு பொது வாழ்க்கையில் இருந்து அவர் விலகினார். அதன் பின்னர் அவர் திருவனந்தபுரத்தில் உள்ள தனது மகன் வி.அருண் குமாரின் இல்லத்தில் வசித்து வந்தார்.