கோழிக்கோடு: கேரளாவில் கடந்த சில மாதங்களாக மூளையை உண்ணும் அமீபா தொற்று பரவி வருகிறது. இத்தொற்று மாசுபட்ட தண்ணீரில் உள்ள அமீபா மூலம் பரவுகிறது. இத்தொற்றுக்கு மலப்புரம் மாவட்டத்தின் வந்தூரை சேர்ந்த 54 வயது பெண் திங்கட்கிழமை உயிரிழந்தார்.
இந்நிலையில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஷாஜி (47) என்பவர் நேற்று உயிரிழந்தார். இதன் மூலம் இந்நோய்க்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.