ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் விதர்பா – கேரளா அணிகள் மோதி வருகின்றன. நாக்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் விதர்பா அணி 379 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக டேனிஷ் மாலேவர் 153 ரன்கள் விளாசினார். தொடர்ந்து விளையாடிய கேரளா அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 39 ஓவர்களில் 3 விக்கெட்கள் இழப்புக்கு 131 ரன்கள் எடுத்தது. அக்சய் சந்திரன் 14, ரோகன் குன்னுமால் 0, அகமது இம்ரான் 37 ரன்களில் ஆட்டமிழந்தனர். ஆதித்யா சர்வதே 66, கேப்டன் சச்சின் பேபி 7 ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
நேற்று 3-வது நாள் ஆட்டத்தை கேரளா அணி தொடர்ந்து விளையாடியது. ஆதித்யா சர்வதே 185 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த நிலையில் ஹர்ஷ் துபே பந்தில் ஆட்டமிழந்தார். இதையடுத்து களமிறங்கிய சல்மான் நிஷார் 21, முகமது அசாருதீன் 34 ரன்களில் வெளியேறினார். சதம் அடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்பட்ட சச்சின் பேபி 235 பந்துகளில், 10 பவுண்டரிகளுடன் 98 ரன்கள் எடுத்த நிலையில் பார்த் ரேகாடே பந்தில் ஆட்டமிழந்தார்.