மதுரை: சிறைக் கைதிகளின் உடல் நிலையை கருத்தில் கொண்டு, கைதிக்கு தேவையான குறைந்தபட்ச வசதிகளை வழங்க மறுக்கக்கூடாது என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நெல்லையைச் சேர்ந்த ஆர்.ராமலிங்கம், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: 'என் மகன் பாளை மத்திய சிறையில் கைதியாக உள்ளார். அவருக்கு நரம்பு சம்பந்தமான பிரச்சினை உள்ளது. நன்கு படித்துள்ளார். சிறைக்குள் நன்னடத்தையுடன் உள்ளார். இவற்றை கருத்தில் கொண்டு என் மகனுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க வேண்டும். இது தொடர்பாக கடந்த 3 ஆண்டுகளாக மனு அளித்து வருகிறேன். என் மனுவை பரிசீலித்து என் மகனுக்கு சிறையில் முதல் வகுப்பு வசதி அளிக்க உத்தரவிட வேண்டும்.' இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.