சென்னை: கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் கிளை பிறப்பித்த உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பதாகும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவை எதிர்த்து மாநில அரசு சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும். பொது இடங்களில் கொடிக்கம்பங்கள் இருக்கக்கூடாது என்பது அடிப்படை உரிமைகளுக்கு எதிரானது. ஐகோர்ட் மதுரை கிளையின் உத்தரவு மறுபரிசீலனை செய்து திருத்தப்பட வேண்டிய தீர்ப்பாகும் என தெரிவித்தார்.
The post கொடிக் கம்பங்களை அகற்ற ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு அடிப்படை உரிமையை பறிப்பதாகும்: முத்தரசன் appeared first on Dinakaran.