திருப்பதி: திருப்பதி தேவஸ்தான கோசாலையில் கடந்த 3 மாதங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் இறந்துள்ளதாக கூறிய கருணாகர் ரெட்டி மீது நடவடிக்கை எடுக்க கோரி தேவஸ்தானம் சார்பில் திருப்பதி எஸ்.பி.யிடம் நேற்று புகார் அளிக்கப்பட்டது.
திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வரா கோசாலையில் கடந்த 3 மாதங்களில் உடல்நலம் குன்றியும், சரிவர தீவனம் வழங்கப்படாமலும் நூற்றுக்கும் மேற்பட்ட பசுக்கள் மற்றும் கன்றுகள் இறந்துள்ளதாக திருப்பதி தேவஸ்தான முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி புகார் கூறினார். இதற்கு புகைப்படங்களை அவர் ஆதாரமாக காட்டினார். இது சமூக வலைதளங்களில் வைரல் ஆனது.