கோவை: கோவை அருகே விவசாயக் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த காட்டு யானையின் உடலை வனத்துறையினர் ஜே.சி.பி உதவியுடன் பத்திரமாக மீட்டனர்.
கோவை மாவட்டம் ஆலாந்துறை அடுத்த சாடிவயல் அருகே நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மூன்று காட்டு யானைகள், விவசாய நிலங்களுக்குள் புகுந்தன. இது குறித்து விவசாயிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இரண்டு யானைகள் வனப்பகுதிக்குள் சென்ற நிலையில், 35 வயது மதிக்கத்தக்க யானை ஒன்று விவசாயி கணேசன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றின் கால் இடறி கிணற்றுக்குள் விழுந்துள்ளது.