கோவை: கோவை ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதால், கூலி உயர்வு பிரச்சினை தொடர்பாக கோவை, திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் மேற்கொண்டு வந்த உண்ணாவிரத போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களை சேர்ந்த விசைத்தறி உரிமையாளர்கள் 2022-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த கூலியில் மின்கட்டண உயர்வு, விலைவாசி உயர்வு ஆகியவற்றை கணக்கில் கொண்டு கூலி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வந்தனர். உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.