ஆசியக் கோப்பை 2025 டி20 தொடர் இன்று தொடங்குகிறது. இந்நிலையில் இந்திய அணியின் செலக்‌ஷன் கோளாறுகள் குறித்த விவாதம் வேறு வடிவம் எடுத்துள்ளது. அதாவது சஞ்சு சாம்சனைக் காலி செய்யத்தான் ஷுப்மன் கில்லை அணியில் எடுத்துள்ளனர் என்பதே அது. இது உண்மைதான் என்று பலரும் கருத்து தெரிவித்துவிட்டனர்.
டெஸ்ட் போட்டிகள் இருந்ததால் யஷஸ்வி ஜெய்ஸ்வால், கில் ஆகியோர் இல்லாத போது பதிலி தொடக்க வீரராகத்தான் சஞ்சு சாம்சன் ஆடினார், என்று அஜித் அகார்கர் கம்பீரின் நோக்கத்திற்கேற்ப ஒரு அபிப்ராயக் குண்டைத்தூக்கிப் போட்டார். கடந்த சீசனில் 3 சதங்களை விளாசிய சாம்சனைத் தூக்குவதா? கில் எங்கிருந்து வந்தார்? போன்ற கேள்விகளை கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் எழுப்பி விட்டனர். சுனில் கவாஸ்கர் மட்டும்தான் வயதாகிவிட்டதால் தனக்கேயுரிய கருத்துச் சொதப்பலில் யாரும் கேள்வி கேட்காதீர்கள், வெளிநாட்டு வீரர்கள் இந்திய அணித்தேர்வில் தலையிட வேண்டாம் என்று கூறியிருந்தார்.