ராய்ப்பூர்: சத்தீஸ்கரின் பிஜாபூர் மாவட்டம் கங்காளூர் வனப்பகுதியில் மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது.
இதைத் தொடர்ந்து மாநில காவல் துறையின் டிஆர்ஜி படை வீரர்கள், எஸ்டிஎப் படை வீரர்கள், கமாண்டோ படை வீரர்கள் மற்றும் சிஆர்பிஎப் வீரர்கள் இணைந்து கங்காளூர் வனப்பகுதியை நேற்று சுற்றி வளைத்தனர்.