சமூக வலைதளத்தை மாணவர்கள் கவனத்துடன் அணுக வேண்டும் என்று நடிகர் விஜய் சேதுபதி அறிவுறுத்தியுள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி. இதன் படப்பிடிப்பு திருச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இதற்கு இடையே பெரம்பலூரில் உள்ள கல்லூரி விழா ஒன்றில் கலந்துக் கொண்டார் விஜய் சேதுபதி.